ரஷ்யாவின் இரகசியத் திட்டம்! மேற்கு நாடுகளிற்கு பெண்டகன் எச்சரிகை

ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் விரைவில் மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத எச்சரிக்கையை விடுக்கலாமென அமெரிக்க இராணுவத்தின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பெண்டகன் உளவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், உக்ரைனின் பாதுகாப்பான பகுதிகள் ரஷ்யாவிற்கு சவாலை தருகின்றன.இதனால் அவர்களின் மனித வளம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை குறைகிறது. இதன் விளைவாக நீண்டகால பொருளாதார மந்தநிலைக்கு ரஷ்யா உள்ளாகலாம்.

இந்த போர் தொடர்ந்து நீளும்பட்சத்தில் அதன் விளைவுகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தும். ரஷ்யாவின் படையெடுப்பிற்கு உக்ரைனின் கடுமையான எதிர்ப்பு தொடர்கிறது.

இதன் காரணத்தினால் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்தேய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களை விரைவில் விடுக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Previous Story

துரோகிகளை சுத்திகரிப்பு செய்வோம்-புடின்

Next Story

ஞானக்காவின் ஆக்கிரமிப்பு