ரவிக்கு ஒஸ்கார் விருது!

நஜீப்

தற்போது ஜனாதிபதி ஜீ.ஆர். தனது மூன்று வருட ஆட்சியில் மூன்றவது அமைச்சரவையை நியமித்து நாட்டை முன்னெடுத்து வருகின்றார். இதற்கிடையில் அவ்வப் போது பல அமைச்சர்களை வெளியேற்றியும் நியமித்தும் வந்திருக்கின்றார். அந்த எண்ணிக்கையை எமக்கு மட்டுமல்ல அவருக்குமே ஞாபகத்தில் இருக்காது.

இன்று ரணிலைப் பிரதமராகக் கொண்ட அமைச்சரவையில் உத்தியோகப்பற்றில்லாத ஒரு அமைச்சர் குழுவையையும் அவர் வைத்திருக்கின்றார். இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சொன்ன ரணிலின் பட்டம்பூச்சி சகாக்கள் அதில் அடங்கி இருக்கின்றார்கள்.

பிரதமர் தலைமையில் நடக்கின்ற கூட்டங்களைப் பாருங்கள் ரணில் பக்கத்தில் அவர்களின் முகங்களை அவதானிக்க முடியும்.

வேடிக்கை என்னவென்றால் மத்திய வங்கியையும் சதோச நிறுவனத்தையும் கொள்ளையடித்ததில் முக்கிய பங்கு வகித்த ரவி கருணநாயக்க மத்திய வங்கி மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்று தற்போது அறிக்கை விடுத்திருக்கின்றார்.

அவரது இந்த கதையைப் பார்த்த பேரின சமூக ஊடகங்கள் ஆளுக்கு கோமாளிக்கான-2022 ‘ஒஸ்கார்’ விருது வழங்க வேண்டும் என்று நையாண்டி பண்ணுவின்றார்கள்.

நன்றி:12.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

50 ஆண்டுகளுக்கு முன்பே.. பூமிக்கு விசிட் அடித்த ஏலியன்கள்? 

Next Story

கோட்டா:நிறைவேற்று அதிகாரி அல்ல- ரணில்