-நஜீப்-
அரசியல்வாதியாக இருந்த நமது பிரதமர் ரணில் இப்போது வைத்தியர் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றாராம். இதுவும் நமது கண்டுபிடிப்பல்ல ஐதேக. செயலாளர் ரங்கே பண்டாரதான் இந்தக் கதையைச் சொல்லி இருக்கின்றார்.
அது என்ன வைத்தியம் என்று பாருங்கள்.! ஜனாதிபதி ஜீ.ஆரின் அரசாங்கம் அங்கக் குறைபாடுகளுடன் பிறந்த பிள்ளையாம் அந்தக் குழந்தையைச் சரி செய்கின்ற வேலையைத்தான் ரணில் இப்போ பார்த்துக் கொண்டிருக்கின்றாராம். எனவே இந்த அரசாங்கத்தின் தவறுகளுக்கு அவர் ஏதும் பண்ண முடியதாம் எனவும் ரங்கே சொல்லி வருகின்றார்.
அதே நேரம் 10.07.2022 திகதிக்குப் பின் எரிபெருள் மற்றும் எரிவாயு பிரச்சினை தீரும் என்றும் அவர் தகவல் தருகின்றார். அதே நேரம் ரணில் சகாவாக வேலை பார்க்கும் சாகல ரத்னாயக்க உத்தியோகபூர்வமாக ஜூலை 22க்குப் பின்தான் எரிபொருள் பிரச்சனை தீரும் என்று அறிவித்திருக்கின்றார். செயலாளர் கதையையா நம்புவது பட்னர் கதையையா நம்புவதா?
நன்றி:03.07.2022 ஞாயிறு தினக்குரல்