–நஜீப்–
திருமலை மாவட்டத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர் ஓராளவுக்கு மாவட்டத்தில் துடிப்புடன் செயலாற்றி வருகின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சில தினங்களுக்கு முன்னர் ராஜபக்ஸாக்கள் துவக்கி வைத்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத்தை ஜனாதிபதி ரணில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றார் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
திருமலை மாவட்ட செயலகத்தில் திட்டமிடல் அதிகாரிகளுக்கு இடை வெளி ஏற்பட்டது. தகுதியுள்ள சிறுபான்மையினர் ஐந்து பேர் அதற்கு விண்ணப்பித்தும் இருந்தனர்.
அவர்களை விட தகுதியும் சேவை மூப்பும் குறைந்த பேரினத்தை சேர்ந்த ஒருவர்தான் அதற்கு நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இப்படி ஒரு இனவாதியாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி ரணிலால் எப்படி இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரமுடியும்?
இவரிடமிருந்து எப்படி சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வரப் போகின்றது என்றும் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பி இருக்கின்றார். அதிகாரத்தில் ஐதேக. தலைவர் ரணில் ஜனாதிபதியாக கதிரையில் இருந்தாலும் தற்போது ராஜபக்ஸாக்களின் ஆட்சியைத்தான் ரணில் முன்னெடுத்து வருகின்றார். என்று சாடுகின்றார் இம்ரான்.
நன்றி: 01.01.2023 ஞாயிறு தினக்குரல்.