ரணிலைப் பாதுகாப்போம் பசில்!

-நஜீப்-

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மொட்டுக் கட்சியினர் வீரவசனங்களைப் பாவித்து அவரை அச்சுறுத்தி காரியம் சாதிக்க முயன்றாலும். இந்தச் சண்டித்தனங்கள் தமக்கு ஆபத்தானவை என்பதனை உணர்ந்திருக்கின்ற ராஜபக்ஸாக்கள், குறிப்பாக பசில் ரணிலுடனான சந்திப்பில் அந்தக் கதைகளை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன் அவரது கையாட்களை வைத்து இப்போது ரணிலுக்கு நாம் விசுவாசமாகத்தான் இருப்போம் என்ற உத்தவாதத்தை பகிரங்கமாக கொடுத்திருக்கின்றார்கள்.

அதனால்தான் மஹிந்தானந்த அலுத்கமகே வெற்றிகரமாக அரசை முன்னெடுத்துச் செல்லும் ரணிலுக்கு மொட்டுக் கட்சி பக்கதுணையாக நிற்கும் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கின்றார். ஏற்கெனவே ரணிலை அச்சுறுத்திக் கொண்டிருந்த மொட்டுச் சண்டியர்கள் இப்போது அடக்கி வாசிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். இதன் மூலம் ரணிலுக்கும் மொட்டுக் கட்சிக்குமிடையில் மோதல் என்பது ஒரு நடாகம்.

மேல் மட்டத்தில் ராஜபக்ஸாக்கள் ரணிலை அதிகாரத்தில் வைத்துத்திருக்கும் அளவுக்குத்தான் நமக்கு அரசியல் ரீதியிலான இருப்பும் வாழ்வும் பாதுகாப்பும் என்பதை அறிவார்கள். இதனால்தான் சலசலப்புகளால் அச்சப்பட வேண்டாம் நாம் இருக்கின்றோம் என்று ரணிலைத் தட்டிக் கொடுத்திருக்கின்றார்.

நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

போரில் சுழியோடும் தேசம்!

Next Story

உலகக் கோப்பை மோதி மைதானத்தில்  இந்தியா - பாகிஸ்தான் மோதும்!