ரணிலின் அஸ்ரஃப் காட்சியகம்!

-நஜீப்-

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றையும் அரசியல் கலாச்சாரத்தையும் தலை கீழாக புறட்டிப் போட்டவர் தான் எம்.எச்.எம். அஸ்ரஃப். அவர் ஒரு முறை ரணில் ஓட்டிச் செல்கின்ற வசு வண்டியில் தான் ‘புட்போர்டில்’ கூட பயணம் செய்யத் தயாராக இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பேசி இருந்தார்.

Muslim MP's to convene on Wednesday - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka

அவருக்கு ஜனாதிபதி ரணில் இன்று அரும்காட்சியகம் ஒன்றை கல்முனையில் நிறுவுவதற்கு இருபத்தி ஐந்து மில்லியன் ரூபாய்களைக் கொடுத்திருக்கின்றார். இந்தப் பணிகளை உடனடியாக துவங்குமாறு ஜனாதிபதி ரணில் கேட்டிருக்கின்றார்.

Late MHM Ashraff remembered on his 23rd death anniversary - Colombo Times

சஜித் கட்சியில் கல்முனையைப் பிரதிநித்துவம் செய்கின்ற மு.கா. திகாமடுல்ல எம்.பி. ஹரிஸ் அவர்களின் வேண்டுகோளின் படி இது வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. ஆனால் இந்தப் பணத்தைப் பெற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரஃபு க்கு காட்சியகம் அமைப்பதை அவரது மனைவி பேரியல் மற்றும் மகன் அமான் திருப்தியுடன் இல்லை என்று தெரிகின்றது.

இது விவகாரத்தில் மு.கா. தற்போதய தலைமை குறிப்பாக தலைவர் ஹக்கீம் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை. அதனை அவர் இன்னும் சில நாட்களில் சொல்லக் கூடும்.

நன்றி: 25.05.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கடவுளே சந்தேகிக்கின்ற இப்ராஹீம் ரைசி மரணம்!

Next Story

யார் கதையைத் தான் நம்புவது!