-நஜீப்-
புதிதாக மொட்டுக் கட்சி தேசிய அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட நாமல் ரஜபக்ஸ கடந்த வாரம் தங்காலை நகரில் ஒரு கூட்டத்தை நடாத்தி இருந்தார். அதில் பேசிய பல அரசியல்வாதிகள் பிழையான தகவல்களையும் புள்ளி விபரங்களையும் அங்கு பேசியதால் இப்போது அந்த விவகாரங்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு இலக்காகி இருக்கின்றது.
அதிலொன்று மொட்டுக் கட்சியை நம்மில் ஒருவரே தோற்கடிப்பார் என்று ஒருவர் பெண் பேசும் போது வாய் உலறி இருக்கின்றார். சர்ச்சைக்குரிய திஸ்ஸகுட்டி ஆராச்சி தமது வாக்கு வங்கி பற்றிய தகவல்களை பிழை பிழையாக அங்கு சொல்லியதால் அவரது பேச்சும் விமர்சனத்துக்கு இலக்காகி இருக்கின்றது.
இதற்கு முன்னர் சம்பலில் இருந்து மொட்டுக் கட்சியை எழுப்ப ஒரு முயற்ச்சி நடந்தது. ஒரிரு கூட்டத்துடன் அது நின்று போனது. இதற்கிடையில் பொதுத் தேர்தல் தொடர்பான கயிறிழுப்பில் ராஜபக்ஸாக்களுக்குப் பின்னடைவு நிலை.
மேலும் சிரேஸ்டமானவர்கள் டசன் கணக்கில் இருக்கின்ற போது நாமலுக்கு அமைப்பாளர் பதவி கொடுத்ததிலும் பலருக்கு அதிர்ப்தி என்று தெரிகின்றது.
நன்றி: 07.04.2024 ஞாயிறு தினக்குரல்