மொட்டுக்குள் பெரு வெடிப்பு!

 -நஜீப்-

மொட்டுக் கட்சிக்குள்  நான்கு அணிகளாம். மஹிந்த, பசில், டலஸ், மதில்மேல் என அவை. இது பகிரங்க சந்திப்புக்கள் என்ற அளவில் போய் விட்டதாகவும் நமக்குத் தகவல். கம்பஹ மற்றும் நாவல் நகரத்து இருவர்தான் மஹிந்த அணி சார்பில் ஓடுகின்றார்களாம். இதற்கு எம்.ஆரும். பூரண ஆதரவாம்.

பசில் தரப்பும் அடுத்த நகர்வுகள் தொடர்பில் வியூகங்கள் போட்டு வேலையாம். உள்ளாட்சி மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என்று ஒரு பெரும் கூட்டத்தை வைத்து அவர் பயமுறுத்தி வருகின்றாராம். டலஸ் தலைமையிலும் ஒரு மஞ்சல் அணி பகிரங்கமாக களத்தில். அவர்கள் புதிய தேர்தல் கூட்டணி என்ற அளவுக்கு முன்னேறி விட்டார்களாம்.

மதில் மேல் பூனை அணி சந்தர்ப்பம்  பார்த்துக் கொண்டிருக்கின்றதாம். இவர்களில் சிலர் சஜித் அணியுடனும் தொடர்ப்பில் இருக்கின்றார்களாம்;. எல்லா அணிகளை ஒன்றிணைப்பது பற்றிப் சிலர் பேசினாலும் அதில் முன்னேற்றம் இல்லையாம்.

மைத்திரியின் சு. கட்சியில் இருந்தும் இன்னும் இருவர் பல்டி ஏற்பாடுகள். சந்திரிக்கா மெகா கூட்டணி ஒன்றுக்கு வியூகம் போடுகின்றார் என்றும் தகவல்.

  நன்றி:03.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பொய் பேசும் கோட்டா -உதயங்க வீரதுங்க

Next Story

தொலைந்து போன கப்பல்!