-நஜீப்-
அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்சிப் படுத்துகின்ற ஒரு நிகழ்வு மே 1. நாளை திங்கட் கிழமை நடக்க இருக்கின்றது. தான் கட்சி சார்பில்லாத ஒரு ஜனாதிபதியாக இருப்பதால் இந்த மே தினத்தில் கலந்து கொள்வதில்லை என்று ரணில் சில தினங்களுக்கு முன்பே தெரிவித்திருக்கின்றார்.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வந்தபோதும் அவர் இப்படித்தான் சொல்லி இருந்தார். மே தினத்தை இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அழைத்து நடாத்துங்கள் என்று அவர் கட்சி முக்கியஸ்தர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
அவர் ஏன் இப்படி அந்தக் கூட்டங்களைத் தவிர்த்து வருகின்றார் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. தனது கட்சி மே தினத்துக்கு மக்கள் வரமாட்டார்கள் என்பதால் இந்த ஏற்பாடாக இருக்கலாம். வரலாற்றில் மிகப் பெரிய மே தினத்தை ஜேவிபி இந்த முறை கொழும்பு-விகாரமகா தேவி பூங்கா அருகில் நடாத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காலிமுகத்திடலை அவர்கள் கேட்ட போதும் கிடைக்கவில்லை. சஜித் அணியும் ஒரு மே தினத்தை கொழும்பில் ஏற்பாடு செய்திருக்கின்றது. இந்த முறை ஆளும் மொட்டுக் கட்சியினர் நடாத்தும் மே தினத்தை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
நன்றி: 30.04.2023 ஞாயிறு தினக்குரல்