முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி

“நான் உயிரோடு இருக்கும் வரை அனுரவை
ஜனாதிபதியாக விடமாட்டோன்
சவால்விட்ட அமைச்சர் வீட்டிலே உயிர்ப்பலி”

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் இன்று (20) உயிரிழந்துள்ளார்.

இவர், லொஹான் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

இதனை தொடர்ந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் இன்று (20) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி | Lohan Ratawate S Personal Secaratery Killed

அதேவேளை, குறித்த நபர்  இருந்த இடத்தில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்துள்ளாரா என பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Story

ஜனாதிபதியின் உத்தரவை நிராகரித்த தேர்தல்கள் ஆணையகம்

Next Story

NPP வேட்பாளர்கள் தமது நல்ல வாய்ப்பை நழுவ விடுவார்கள்!