முதியவரை சாப்பிட்ட வாலிபர் கைது!

அமெரிக்காவில், முதியவரை கொன்று நர மாமிசம் சாப்பிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவில் இதாஹோ மாகாணத்தில், ஒரு டிரக்கில் தலைகீழாக தொங்கிய முதியவரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு, ரத்தம் வழிந்தோட காணப்பட்ட அந்த சடலத்தில் சில பாகங்கள் இல்லாதது கண்டு போலீசார் திகைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது கொலை செய்யப்பட்டவரின் பெயர், டேவிட் பிளாகெட் என்பது தெரியவந்தது.

இதையடுத்து துப்பு துலக்கிய போலீசார், ஜேம்ஸ் டேவிட் ரசல் என்பவர் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். முதலில் அவர்களை அனுமதிக்க மறுத்த ஜேம்ஸ், பின் ஒருவாறு சோதனை நடத்த ஒப்புக் கொண்டார். அப்போது, அந்த வீட்டில் ஒரு தட்டில் கல்லீரல், நுரையீரல் பாகங்கள், ரத்தம் நிறைந்த ஒரு கண்ணாடி குவளை, கத்தி, ரத்தக் கறை படிந்தமைக்ரோவேவ் ஓவன்ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஜேம்சை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், டேவிட் பிளாகெட்டை கொலை செய்ததை ஜேம்ஸ் ஒப்புக் கொண்டார். தன் மூளை சுறுசுறுப்பாக செயல்பட, டேவிட் பிளாகெட்டை கொன்று அவரது மூளை உள்ளிட்ட உடல் பாகங்களை சாப்பிட்டு வந்ததாக, ஜேம்ஸ் கூறினார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜேம்சை மன நல மருத்துவ சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டது.

இதாஹோ மாகாண சட்டப்படி நர மாமிசம் உண்போருக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். ‘இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, ஜேம்சுக்கு தண்டனை கிடைத்தால், அது, இதாஹோ மாகாணத்தில் முதன் முதலாக நரமாமிசம் சாப்பிட்டவருக்கான தண்டனையாக இருக்கும்என, வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Story

தேரர் அவமானம்:சந்திரிக்கா புகழாரம் !

Next Story

இளவரசி ஹயாவிக்கு இலங்கை ரூபாய் 14740 கோடி:  துபாய் ஷேக்குக்கு உத்தரவு