செய்தி முட்டிக் குனியும் சுமந்திரன் கதை! July 30, 2023 –நஜீப்– ஜனாதிபதி ரணில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தருகின்றேன் கொழும்புக்கு கொஞ்சம் வந்துட்டுப் போரிகளா? என்று கூட்டமைப்பு அரசில்வாதிகளிடம் அடிக்கடி கேட்ட போதெல்லாம் ஆட்களை ஆர்வத்துடன் அங்கு அழைத்து வந்து ரணிலுடன் மந்திரலோசனை நடத்துவதில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டவர்தான் ஐயா சுமந்திரன். பெரியவர் சம்பந்தன் உடனலக் குறைவில் இருப்பதால் ஏறக்குறைய கட்சியின் தலைமைப் பதவியை ஐயா சுமந்திரன் தனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருப்பது என்பது அனைவரும் அறிந்த கதைதான். இப்போது அந்த சுமந்திரன் ஜனாதிபதி ரணில் எங்களை ஏமாற்றுகின்றார் இதன் பின்னர் ஆளை நம்பி பயனில்லை. ரணிலின் சர்வகட்சி மாநாடு படுதோல்வி என்று பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் திரும்பவும் ரணில் அழைத்தால் இவர் ஆட்களை அழைத்துக் கொண்டு அங்கு போக மாட்டார் என்று சொல்ல முடியாது. ரணில் நாடகம் பற்றி துவக்கத்தில் இருந்தே நாம் சொல்லி வருகின்றோம். ஆனால் கடைசிவரை சட்டவல்லுணருக்கு இது புரியாமல் இருந்து வருகின்றது. இது அரசியல் அவரது வியாபாரம் என்பதால் என்னவோ? நன்றி: 30.07.2023 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in October 20, 2024October 20, 2024 ஜம்மியத்துல் உலமா சபை விலை போய் விட்டதா? October 20, 2024October 20, 2024 தலைவரும் பிள்ளைகளும் கதை இது! October 20, 2024October 20, 2024 இளசுகள் ஜனாதிபதி பக்கமாம்! October 19, 2024October 20, 2024 அன்றும் இன்றும் வசதி வாய்ப்பு! October 18, 2024October 18, 2024 மஸ்தான், அங்கஜன் NPPயில் இணைய வந்தனர் October 18, 2024October 18, 2024 டக்ளஸின் இணைப்புக்கு அரச விடுதி: அம்பலம் Previous Story கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து: 9 பேர் உடல் சிதறி உயிரிழப்பு! Next Story முஹரம் கொடியேற்ற எதிர்ப்பு: பீகாரில் மோதல் - பொய் பரப்புவது யார்?