மீண்டும் வேதாளம் வருகை!

-நஜீப்-

போருக்குப் பின் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கம் செய்வது தொடர்பில் சர்வதேசத்தையும் இந்தியாவையும் இங்கு வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களையும் ஏமாற்றுவதில் இலங்கை ஆட்சியாளர்கள் தொடர் வெற்றிகளை பெற்று வந்திருக்கின்றார்கள்.

தனக்கு நெருக்கடியான அரசியல் நிலமைகளில் இந்தியாவுக்குப் போய் பதிமூன்று பிளேஷ என்று சொன்ன ராஜபக்ஸாக்கள் அதன் பின்னர் நடந்த தேர்தல்களின் போது இந்த 13 பிளசுக்கு என்ன செய்தார்கள் என்பது அனைவரும் அறிவார்கள்.

கடந்த ஜனாதிபத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் பேரிவாதிகளை வைத்து நடாத்திய நாடகங்களை ஒரு முறை மீட்டுப் பாருங்கள். அதிகாரப் பரவலாக்கள் தொடர்பில் ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசமான சரத் வீரசேக்கர போன்றவர்களை வைத்து என்ன செய்தார்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் அரசு எதிர் நோக்கி இருக்கின்ற நெருக்கடி நிலையின் கவத்தை திசை திருப்புகின்ற யுக்தியாகத்தான் அதிகாரப் பரவலாக்கல் பற்றிய புதிய கதை  உபயோகிக்கப்படலாம்.

நன்றி:27.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காணாமல் போன பீனிக்ஸ்!

Next Story

குஜராத்:ஆம் ஆத்மி கட்சி தான் 100% ஆட்சிக்கு வரும்!