மீண்டும் இலங்கை பங்களாதேஷிடம் கடன் !

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை இலங்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது இரு நாடுகளுக்கும் இடையிலான நாணய பரிமாற்ற ஏற்பாடாக இது அமையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னரும், அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க பங்களாதேஷ் இதேபோன்ற வசதியை இலங்கைக்கு வழங்கியது.

இதேவேளை ஏற்கனவே இந்தியாவிடம் இருந்து பெற்ற ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக மேலும் ஒரு பில்லியன் டொலர்களை இலங்கை இந்தியாவிடம் கோரியுள்ளதுஅத்துடன் சீனாவிடம் இருந்தும் 2.5 பில்லியன் டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது.

Previous Story

 ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி?

Next Story

மனம் கலங்கி விட்ட - இந்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உருக்கம்