“மீசையை பார்த்ததும் ஆசை வந்துடுச்சு..” திருடியவரிடம் இதயத்தை பறிகொடுத்த இளம்பெண்!

பிரேசில் நாட்டில் நடந்த மிக மிக வினோதமான ஒரு காதல் கதை குறித்த தகவல்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பொதுவாகக் காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதாவது ஒருவருக்கு எப்போது.. யார் மீது.. எப்படி காதல் வரும் என்றே யாருக்குமே தெரியாது. இப்படி திடீர் திடீரென வரும் காதல் ரொம்பவே சுவாரசியமாக இருக்கும்.

Brazilian Woman Falls In Love With Man Who Stole Her Phone, Their Bizarre Story Is Now Viral

இதுபோல நம்மை சுற்றிப் பல காலமாகவே சுவாரசியமாகக் காதல்கள் அரங்கேறினாலும், இந்த இணைய உலகில் தான் இது குறித்த தகவல்கள் பொதுவெளியில் வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

இங்கே இளம்பெண் ஒருவர் தன்னிடம் இருந்து ஒரு பொருளைத் திருடிச் சென்றவரையே காதலிக்கத் தொடங்கியுள்ளார். ஏதோ ஒரு பொருள் என்றதும் இதயம் என ரோமென்ஸ் உருகும் என நினைக்காதீர்கள். அவர் உண்மையாகவே ஒரு திருடன் தானாம். இந்த பெண்ணிடம் இருந்து மொபைலை திருடிச் சென்றுள்ளார்.

அப்போது தான் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்தே இருவருக்கும் காதல் வந்துள்ளது. இந்த காதல் கதை தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து அந்த பெண் இமானுவேலா கூறுகையில், “அன்றைய தினம் எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது. நான் ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன்.

அப்போது எனது மொபைல திருடிச் சென்றனர். இதுதான் எங்களின் முதல் டேட் என்று கூட சொல்லலாம்” என்று வெட்கப்பட்டுச் சிரிக்கிறார். இந்த திருட்டு சம்பவம் தான் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது. அந்த முன்னாள் திருடன் கூறுகையில், “நான் அப்போது மிக மோசமான ஒரு சூழ்நிலையில் இருந்தேன்.. எந்தவொரு பெண்ணும் என்னை டேட் செய்ய மாட்டார் என்ற விரக்தியில் இருந்தேன்.

Indiatimes

அப்போது இவரது மொபைல் திருடினேன். அதில் இருந்து அவரது படத்தைப் பார்த்ததும் எனக்குள் என்னவோ ஆனது. என்ன ஒரு அழகான பெண்.. தினமும் இப்படியொரு அழகியைப் பார்க்கவே முடியாது என்று நான் யோசித்தேன். ஏன்டா திருடினோம் என்று கூ யோசித்தேன். அதன் பிறகு இருவரும் டேட் செய்ய ஆரம்பித்தோம்.

 

இப்போது இரண்டு ஆண்டுகளாக டேட் செய்து வருகிறோம்” என்றார். இவர்களின் இந்தக் காதல் கதை இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த நபர் மொபைலை திருடும் போது கூடவே பெண்ணின் இதயத்தையும் திருடிவிட்டதாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Brazil Bizarre: Man Who Stole Woman's Phone Is Now Her Boyfriend; Couple's Love Story Goes Viral

மொபைலை திருடியதும் அந்த இளைஞன் பெண்ணிடம் நேரடியாகச் சென்று பேசியதாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணுக்கும் அந்த நபரைப் பிடித்துப் போகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர். இருப்பினும், முன்னாள் திருடன் ஒருவனைத் தனது மகள் காதலிப்பதை அவர்களின் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா என்பது குறித்த தகவல்கள் இப்போது வரை இல்லை.

இவர்கள் விரைவில் திருமணமும் செய்ய உள்ளதாகக் கூறப்படுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், பலரும் இதைப் பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற வினோதமான காதல் கதைகள் எல்லாம் பிரேசில் நாட்டில் மட்டுமே நடக்கும் எனப் பலரும் கருத்து கூறி வருகின்றனர். ஏனென்றால் அங்கு தான் ஒரே நபர் பலரைக் காதலிப்பது, 65 வயது மேயர் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்வது எனப் பல வினோதமான சம்பவங்கள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous Story

 வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் சவுதி அரேபியா

Next Story

"சர்வாதிகாரம்.." இஸ்ரேலில் ராணுவ ஆட்சி?