உடதலவின்ன மடிகே பொது வாசிகசாலைதிறந்து ஒரு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு அதன் நிருவாகிகள் கட்டுரைப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். பாடசாலை மட்டம், திறந்த போட்டி, மற்றும் சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி என்று இது அமைகின்றது.
பாடசாலை மட்டத்தில் ஆறு பிரிவுகளும் திறந்த போட்டி ஒன்றும் இதில் அடங்குகின்றன. ஒவ்வொரு போட்டிப்பிரிவுக்கும் தலா
1ம் இடம் 5000 ரூபா
2ம் இடம் 3000 ரூபா
3ம் இடம் 2000 ரூபா
என்று பணமும் சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் நமக்குத் தெரிவிக்கின்றனர். மேலதிக விபரங்களை கீழே பார்க்கவும்.
முக்கிய குறிப்பு:
உடதலவின்ன மற்றும் வத்தேகெதரயை பூர்வீகமாகக் கொண்டவர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும்இதில் பங்கு கொள்ளும் உரிமையை பெறுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியில் உள்ளவர்கள் இந்த மண்ணுடனான தனது உறவை உறுதி அல்லது தெளிவுபடுத்தவேண்டும் என்பது மட்டுமே இங்கு நிபந்தனை.