மஹிந்த வீடு எரிகின்றது தினமலர்!

NEWS ONE 1

இந்தியாவின் புகழ் பெற்ற செய்தித்தாளான தினமலர் மஹிந்த வீடு எரிகின்றது என்று ஓர் பிரேக்கிங் செய்தியை சொல்லிக் கொண்டிருக்கின்றது. இது அலரி மாளிகையா அல்லது தெற்கில் இருக்கும் கார்ல்டன் மாளிகைள என்று எமக்கு இன்னும் உறுதி செய்து கொள்ள முடியாதிருக்கின்றது.

இலங்கை: ராஜபக்சே வீட்டைக்

  கொளுத்திய போராட்டக்காரர்கள்!

இலங்கையில் பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீட்டை போராட்டக்கார்கள் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு காணப்படுகிறது.

இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கிஉள்ளது. இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கை அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.

இந்நிலையில் இலங்கையின் குருனகாலாவில் பிரதமர் மகிந்தா ராஜபக்சே வீடு உள்ளது. இந்த வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரரகள் அடித்து நொறுக்கினர்.

வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்ட நிலையில் இன்றுநடந்த வன்முறை சம்பவங்கள் இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

(தினமலர் தகவல்: குருனகாலா வீடு)

NEWS  3

அத்துடன்,  அம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடும், எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Story

மஹிந்த ராஜபக்ஸ துவக்கி வைத்த வன்முறை

Next Story

வீரவங்ச வீடும்  தற்போது எரிகின்றது