மஹிந்தாவும் வீதிக்கு வாரார்!

-நஜீப்-

உள்ளாட்சி மன்றத் தேர்தல்களைத் தள்ளிப் போட்டது போல பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை தள்ளிப் போட முடியாது. அப்படி நடக்குமாக இருந்தால் நான் உயிரோடு இருந்தால் மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவேன் என்று ஒரு தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டி கொடுத்திருக்கின்றார் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய.

முன்பு ஒரு முறை தேர்தல் வாக்குச் சாவடிகளுக்கு வந்து எவராவது வன்முறை பண்ணினால் அவர்களது தலையில் சுட்டுத் தள்ளுங்கள் என்று கூறியவரும் இவர்தான். நாம் அறிந்த வரை நாட்டில் தேர்தல் வன்முறைகள் கடந்த காலங்களில் குறைவதற்கு இவரது செயல்பாடுகளும் துனிச்சல்களுமே காரணம் என்பது நமது கருத்து.

எதனையும் வெளிப்படையாக பேசும் இவர் ஒரு ஆளுமை மிக்க நிருவாகி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓய்வு பெற்றிருக்கும் இவர் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எவரும் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்றும் அரசியல் தலைவர்களிடத்தில் கேள்வி எழுப்பி வருகின்றார்.

நன்றி: 31.03.2024 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

பசிலை கடுமையாக சாடிய அமைச்சர்

Next Story

ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு கல்லடி, கசையடி!