மலராத பூக்கள்: தொழிலாளர்களுக்கு சிறை!

பிறந்தநாளை முன்னிட்டு, மலர்களை அரசு தோட்டத்தில் இன்று அதிகம் மலரச்செய்ய வேண்டும் என, அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் அவர் கூறியதுபோல் மலர்கள் இன்று மலர வாய்ப்பில்லை என்பது உறுதியானது. இதையடுத்து, மேற்பார்வையாளர் உள்ளிட்ட தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய நாடுகளிலும் இந்த தினம் பிரபலமாகி வருவதால் காதலர்கள் வீதி எங்கும் உலா வர துவங்கி விட்டனர்.

இவர்களை கவர்வதற்காக உலக நாடுகளில் வியாபாரிகள் பலர் காதலை கொண்டாடும் பல பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.

சிவப்பு நிறத்திலான உடைகள் பரிசுப் பொருட்கள் என இந்த நாளை ஒட்டி வியாபாரம் எப்போதும் களைகட்டும். இவற்றை காதலர்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுவர்.

சிவப்புநிற ஆர்டின் பொம்மைகள், தலையணைகள், உடைகள் என கடைகள் அனைத்திலும் சிவப்பு நிற பொருட்கள் இந்தநாளில் நிரம்பி வழியும்.

சவுதி அரேபியாவில் இந்த தினம் கொண்டாட அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டு வியாபாரிகளுக்கு சவுதி அரசு கட்டுப்பாடு ஒன்றே விதித்துள்ளது.

அங்காடிகளில் இதுபோன்ற சிவப்பு நிற காதலர் தின கொண்டாட்டங்களுக்காக பொருட்களை விற்பனை தவிர கடையில் எங்கும் வேலன்டைன்ஸ் டே என்கிற பதாகை, வாசகம் இடம் பெறக்கூடாது, அந்த வார்த்தையையும் வாடிக்கையாளரிடம் பயன்படுத்தக் கூடாது என வித்தியாசமான ஓர் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலமாக இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் நினைத்துக்கொண்டு இதுபோன்று செயல்படுவது இணையத்தில் வேடிக்கைக் உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Story

நாங்கள் JVP யை ஆதரிப்போம் - கல்முனை ஐ.ம.ச. ஆதரவாளர்

Next Story

கல்முனை :ஒன்றுகூடலும், கௌரவிப்பும்