மருந்து சம்பளம் ஓய்வூதியம்!

-நஜீப்-

இலங்கை அரசியலில் இப்படி ஒரு மந்திரம் இந்த நாட்களில் பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டு வருவதை நாம் கேட்கின்றோம்-பார்க்கின்றோம்

எப்படியாவது இந்த மந்திரத்தை சொல்லி உள்ளூராட்சித் தேர்தலைத் தள்ளிப் போட பெரியவர்கள் கட்டளை போட்டிருப்பதால் அமைச்சர்களான ஹரின், சியம்பலாபிட்டிய, பந்துல, அமரவீர, போன்றவர்கள் மக்கள் மத்தியில் தற்போது இதனை உச்சரித்துக் கொண்டு திரிகின்றார்கள்.

இப்படியாவது மக்களை அச்சமூட்டி இந்தத் தேர்தலைத் தள்ளிப்போடும் தந்திரம்தான் நாட்டில் நடக்கின்ற என்பது அனைவருக்கும் நன்கு புரிகின்றது. தேர்தலுக்கு பத்து பில்லியன் செலவு செய்யக் காசு இல்லை என்று சொல்பவர்கள் ஒரு நாள் கூத்துக்கு- 75வது சுதந்திர தினத்துக்கு 27 கோடிகளை வீசுகின்றார்கள்.

இது பற்றிக் கோட்டல் சர்வதேச கவனயீர்ப்புக்காக இப்படிச் செய்ய வேண்டி இருக்கின்றது. இது ஒரு மூலதனம் என்று ஜனாதிபதி ரணில் பதில் வழங்கி இருக்கின்றார். ஜனாதிபதியாக ரணிலுக்கு  இது முதல் சுதந்திர தினம்.  இப்படி விழாவை ஆடம்பரமாகச் செய்தால்தானே தான் சுயசரிதை எழுதுகின்ற போது அந்தப் புகைப்படங்களை அதில் இணைத்துக் கொண்டு அழகு பார்க்க முடியும்.

இது அதற்கான ஏற்பாடோ என்னவோ.? நண்பனுக்கு சீனி வர்த்தகத்தில் 1600 கோடியை முன்னவர் அல்லிக் கொடுக்கின்ற போது இது என்ன பெரிய தொகையா?

நன்றி: 22.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நீதவானிடம் ஏச்சு வாங்கிய மைத்திரி

Next Story

நகைச்சுவையான வேட்பு மனு!