பேரவாவியில் தூக்கிப் போடுவோம்!

-நஜீப்-

நெடுங்காலமாக இந்த நாட்டை பாதாளத்துக்கு இழுத்துச் சென்ற முட்டால் ஆட்சியாளர்களைக்  காதில் பிடித்து பேரவாவியில் தூக்கிப் போடுகின்ற நாள் வெகு தூரத்தில் இல்லை என்று கொழும்பு-ஹைட் மைதானத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்ட பேரணியில் பகிரங்கமாகத் தெரிவித்தார் ஜேவிபி தொழிற் சங்கத் தலைவர் வசந்த சமரசிங்ஹ.

வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு 600 சதவிகிதத்தால் மேலும் அசாதாணமாக அதிகரிக்கப்பட இருப்பதையும் சமரசிங்ஹ அங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் தொழிற் சங்கத்தினரும் அரகலயப் போராட்டக்காரர்களும் ஓரணியில்  திரண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதே போன்று மற்றுமொரு பேரணி கூட்டு எதிரணியினர் தலைமையில் வருகின்ற இரண்டாம் திகதி கொழும்பில் நடக்க இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் சஜித், டலஸ், வாசு, சம்பிக்க, சம்பந்தன், ஹக்கீம். மற்றும் மலையக அரசியல் கட்சியினரும் இடதுசாரிகளும் இணைந்து கொள்ள இருப்பதாக தெரிகின்றது. \

வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் மேலும் நெருக்கப்படுவார்களாக இருந்தால் தெருப் போராட்டங்கள் வீதிகளில் வெடிக்கும் என்றும் அஞ்சப்படுகின்றது.

நன்றி- 30.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

“வம்சாவளியால்” வீழ்ந்த பாகிஸ்தான்.. ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி! யார் இந்த “காஷ்மீரி” சிக்கந்தர் ராஜா?

Next Story

கருணை கொலை செஞ்சுடுங்க பெண் அலரல் !காரணம்....!