/

பெரும் அச்சுறுத்தலான குரங்கு அம்மை –  எச்சரிக்கை

குரங்கு அம்மை தொற்று

உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு

இந்த வைரஸ் தாக்கும்

அபாயம் அதிகமென

வைத்திய நிபுணர்கள்

எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் பயன்பாட்டில் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

நோய் பாதுகாப்பு

இந்த வைரஸின் தற்போதைய மாறுபாடு தீவிரமற்ற மாறுபாடாகும் என பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான தற்போதைய சுகாதார நடவடிக்கைகள் குரங்கு அம்மை தொற்றிலிருந்தும் பாதுகாப்பதற்கான முக்கியமான நடைமுறையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள குரங்கு அம்மை - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்குள் நுழைகிறதா குரங்கு காய்ச்சல்?

தற்போது பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பில் இலங்கை வைத்தியசாலை அமைப்பு மற்றும் வைத்தியர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக்கு வரும் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை அடையாளம் காண விமான நிலையத்தில் தயார்படுத்தல் செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளார்.

விமான நிலையத்தில் குரங்கு அம்மை தொற்றின் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொரோனாவை போல பாதிப்பு ஏற்படுத்துமா?

கொரோனா தொற்றுடன் ஒப்பிடும் போது இந்நோயின் பரவலானது ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாகவும், நெருங்கிய தொடர்பின் மூலம் இந்நோய் இலகுவாகப் பரவக்கூடியது எனவும் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொரோனாவை அடையாளம் காண பயன்படுத்தப்படும் வகையின் மரபணு பகுப்பாய்வு மூலம் நோயைக் கண்டறிய முடியும்.

பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள குரங்கு அம்மை - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையிலும் பாதிப்பு

ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்து இலங்கைக்கு பரவும் பெரியம்மை வைரஸ் பரவும் சாத்தியக்கூறுகள் தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நோய் நாட்டில் பரவியுள்ளதா என்பதை கண்டறியும் மரபணு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளவர்களிடம் இருந்து இந்த நோய் பரவும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள குரங்கு அம்மை - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீழ் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும் எனவும், அவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாடுவது அவசியமானது எனவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

தொண்ணூற்று இரண்டு குரங்கு அம்மை நோயாளர்கள் உலகளவில் பதிவாகியுள்ளனர், மேலும் இலங்கையில் இன்றுவரை எந்த நோயாளர்களும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.

இந்த தொற்று பாதித்த மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.

காய்ச்சல் ஏற்பட்டதும் தடிப்புகள் ஏற்படும். இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் வரும். கடைசியாக சிரங்கு போல உண்டாகி உதிர்ந்து விடும். இந்தக் காயங்களால் தோலில் தழும்பு ஏற்படும்.

14 முதல் 21 நாட்கள் வரை இந்தத் தொற்று, தாமாகவே சரியாகிவிடும்.

எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

குரங்கம்மை வைரஸ் எப்படி பரவும்?

ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் குரங்கம்மை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.

தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுக் குழாய் வழியாகவும், வாய், மூக்கு, மற்றும், கண்கள் வழியாகவும் மனித உடலுக்குள் குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி நுழையும்.

குரங்கம்மை பாலியல் ரீதியாகப் பரவும் நோய் என்று கூறப்பட்டதில்லை. ஆனால் இது உடலுறவின்போது ஒருவருடன் ஒருவர் உடல் ரீதியாக நெருக்கமான தொடர்பில் இருந்தாலே பரவக்கூடியது.

நோயால் பாதிக்கப்பட்ட குரங்கு, அணில், எலி போன்ற விலங்குகளுடன் தொடர்பில் இருக்கும்போதும், குரங்கம்மையை உண்டாக்கும் வைரஸ் கிருமி படிந்துள்ள படுக்கைகள் ஆடைகள் போன்றவை மூலமும் இக்கிருமி பரவுகிறது.

Previous Story

இலங்கையால் மலோசியாவில் நெருக்கடி!

Next Story

டி.ராஜேந்தர்: சிகிச்சைக்காக சிங்கப்பூர்  செல்கிறார்