இந்த நாட்டை ராஜபக்ஸாக்கள் சீரழித்து விட்டார்கள். அவர்கள் காலத்தில் நடந்த ஊழல் மோசடிகள்தான் இந்த நெருக்கடி நிலைக்குப் பிரதான காரணம் என்று சந்திரிக்க சாடியிருக்கின்றார்.
த இந்து பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில்தான் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
மேலும் இலங்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஒரே மார்க்கம் சமூகப் புரட்சி என்றும் அவர் அதில் சொல்லி இருக்கின்றார்.
போராட்டக்காரர்கள் தன்னை ஒரு சந்தர்ப்பத்தில் வந்து சந்தித்த போது அனைத்து கட்சிகளில் இருக்கின்ற நல்ல நேர்மையானவர்களை வைத்து ஒரு அமைச்சரவையை அமைப்பதற்கு நான் அவர்களுக்கு சிபார்சு செய்திருந்தேன்; என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்க குறிப்பிட்டதுடன் தன்னை இந்த ராஜபக்ஸாக்கள் பலிவங்கியதையும் அவர் இந்து போட்டியின் போது தெரியப்படுத்தனார்.
மைத்திரியை களத்துக்கு கொண்டு வந்து ஒரு முறை இந்த ராஜபக்ஸாக்களுக்கு சந்திரிக்க ஒரு பாடம் கற்றுக் கொடுத்ததும் தெரிந்ததே.