-நஜீப்-
களவு போன புத்தரைத் தேடித்தாருங்கள் என்று பொலிசாருடன் அடம் பிடித்திருக்கின்றார் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்தன தேரர். இவருக்கு சட்டம் செல்லுபடியாகாது என்ற வகையில் கடந்த காலங்களில் அவர் நடவடிக்கைகள் அமைந்திருந்ததை முழு நாடும் அறியும்.
இந்த நாட்டில் இனரீதியான வன்முறையில் ஈடுபடுகின்ற பௌத்த தேரர்களுக்கு கடந்த காலங்களில் விஐபி சலுகைகள் கொடுக்கபட்டு வந்ததை நாம் அறிவேம். கோட்டா அதிகாரத்தில் இருந்த காலத்தில் இது உச்சம் தொட்டிருந்தது. இன்றும் அவர்களுக்கு அந்த வாய்ப்புக் கொடுக்கபட்டிருக்கின்றது என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.
எனவேதான் இன்னும் இந்த அம்பிட்டிய தேரர் அதிகாரிகளை, பொலிஸை, சட்டத்தை மதிக்கமால் தொடர்ந்தும் வன்முறையாக நடந்து கொண்டு வருகின்றார். சாணக்கியனுக்குப் பயந்து ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமைய விகாரையை மூடிவிட்டு தாம் வைத்த புத்தர் சிலையை இராணுவத்தினர் களவெடுத்துக் கொண்டு போய் இருக்கின்றார்கள்.
இப்படியாக அரசுக்கும் பொலிசுக்கும் தமிழர்களுக்கும் எதிராக அவர் வழக்கம் போல் அங்கு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தார்.
நன்றி: 22.10.2023 ஞாயிறு தினக்குரல்