புகையிரத சீட்டு வழங்குவது நிறுத்தம்!

இன்று நள்ளிரவுக்குப் பின்னர் சாதாரண புகையிரத சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதங்களுக்கான முன்பதிவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அச்சங்கத்தின் தலைவரான சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.புகையிரத நிலைய அதிபர்கள் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக நேற்று இலங்கை புகையிரத பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Story

அயோத்தி ராமர் கோயில் நிலம் மோசடி.-பிரியங்கா புகார்

Next Story

அனுஷ்கா விராட் ஜோடியின் பதிவு!