பிரியந்த குடும்பத்திற்கு  இழப்பீடு

பாகிஸ்தான் சியால்கோட் நகரில் சித்திரவதைக்குட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை நேற்றிரவு அனுமதி வழங்கியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக பிரியந்த குமார தியவடன கடந்த 11 வருடங்களாக ஆற்றிய பங்களிப்பை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.பிரியந்த குமார தியவடனவின் குடும்ப நலன்புரி விடயங்களை கருத்திற்கொண்டு, இந்த தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.மேலும், பிரியந்த குமாரவின் குடும்பத்தின் நலனுக்காக இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறினார்.

Previous Story

கிரிக்கெட் அட்டவணை தேதி மற்றும் நேரம் அணி இடம்

Next Story

பிரியந்த நிகழ்வு - 100,000 டொலர் குவிந்தது