-நஜீப்-
‘சமன் ரத்னப்பிரிய பதவியிலிருந்து தூக்கப்படுகின்றார்’
ரணில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வர மாட்டார். இது தனக்கு நூற்றுக்கு (100-1000) ஆயிரம் மடங்கு உறுதி. இப்படி கூறி இருக்கின்றார் ரஜபக்ஸாக்களின் உறவினர் உதயங்க வீரதுங்ஹ. கடந்த வியாழன் நடந்த ஒரு செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதே போன்று மே மாதம் அளவில் பொதுத் தேர்தல் வருகின்றது என்று நாம் முன்பு சொல்லி இருந்த கருத்தை அவரும் இந்த சந்திப்பில் அடித்துக் கூறி இருக்கின்றார். அத்துடன் நமது பிரதமர் வேட்பாளர் நாமல் ராஜபக்ஸதான் என்றும் அவர் கூறுகின்றார்.
மேலும் பொதுத் தேர்தல் தொடர்பாக ரணில் மற்றும் ராஜபக்ஸாக்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டார்கள். அதன்படி வருகின்ற (2024 January 16) பதினாராம் திகதி ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்னப்பிரிய பதவியிலிருந்து தூக்கப்பட்டு அந்த இடத்திற்கு மீண்டும் காமினி செனரத் வருகின்றார்.
இது எமது தேர்தலுக்கான முன்னேற்பாடு. பெப்ரவாரி முதல் வாரத்தில் அண்ணன் பசில் ராஜபக்ஸ நாடு திரும்புகின்றார். அதன் பின்னர் எமது தேர்தல் பணிகள் ஆரம்பமாகின்றது என்றும் உதயங்க வீரதுங்ஹ உறுதிபடச் சொன்னார்.
நன்றி: 07.01.2024 ஞாயிறு தினக்குரல்