பாஸ்டர் ஜெரோம் பாலியில்!

-நஜீப்-

நாட்டில் பெரும் கொந்தளிப்பை உண்டு பண்ணிய பாஸ்டர் ஜெரோம் தற்போது ஓய்வுக்காக சிங்கப்பூர் வழியாக பாலித் தீவுக்குப் போய் இருக்கின்றார் என்று தெரிகின்றது. இவருடன் நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்கள் பலருக்கு நெருக்கமான உறவு இருந்திருப்பதும் தற்போது அம்மபலமாகி இருக்கின்றது.

தான் ஞாயிறு மீண்டும் நாட்டுக்கு வருவதாக ஜெரோம் இண்டர்கிரோமில் தெரிவித்திருக்கின்றார். அவர் வந்ததும் கைதாக வேண்டும் என்று சிலர் கொதிக்கின்றார்கள். அவருக்கு கட்டுநாயக்காவில் 10 ஏக்கர்  நிலம் வழங்கப்பட்டிருக்கின்றது. அதில்தான் அவர் தேவாலயம் அமைந்திருக்கின்றது.

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் மகிந்தவிற்கு நெருக்கமானவரா..! | Pastor Jerome Fernando

அந்த நிலம் ஒரு பேர்ச் ஐம்பது ரூபா வீதம் பெறப்பட்டிருக்கின்றது. அரசியல் செல்வாக்கில்லாது இது எப்படி சாத்தியம்.? அத்துடன் இவர் ஒரு சிஐஏ உளவாளி என்றும் சிலர் கூறுகின்றார்கள். ஜெரோம் கதையுடன் காணாமல் போய் இருந்த ஞானத்தாரும் தற்போது வெளிப்பட்டிருக்கின்றார். நாடுபூராவிலும் பிள்ளை பிடிப்போரும் ஓடித் திரிகின்றார்கள். இதிலும் ஜெரோம் கதையின் பின்னணியிலும் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல்தான் இருக்க வேண்டும்.!

நன்றி: 21.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அமைச்சுப் பதவி தராமல் 10 பேருக்கு அநீதி!

Next Story

தாகத்துக்கு கானல் நீர்!