பாத்திமா நஸ்ரின் சட்டத்தரணியாக சத்தியப் பிரமானம்

திருகோணமலை-ஜமாலியா வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாத்திமா நஸ்ரின் முஸ்தபா சில தினங்களுக்கு முன்னர் சட்டத்தரணியாகவும் பிரசித்த நொத்தாரிசாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதி மன்ற நீதியரசர்கள்  குழாம் முன்னிலையில் கொழும்பு உச்ச நீதி மன்ற கேட்போர் கூடத்தில் வைத்து சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.

இவர் திருகோணமலை ஸ்ரீ சன்முக இந்து மகளிர்கல்லூரியின் (தேசிய கல்லூரி) பழைய மாணவியுமாவார்.

திருகோணமலை-ஜமாலிய முஸ்லிம் மகா வித்தியாலய முன்னாள் அதிபரும் (முதல்தர) சமூக ஆர்வலருமான என்.பி.முஸ்தபா மர்ஹூம் நூர்ஜான் முஸ்தபா ஆசிரியையின் மகளும் வர்த்தகப் பிரமுகரான பாரூக் நௌஷாட் அவர்களின் மனைவியுமாவர்.

 

Previous Story

உலக பணக்காரர் ஈலோன் மஸ்க் செலுத்தும் வரி !

Next Story

நாம் தமிழர் - திமுகவினர் மோதல்