பாக்.கில் கொரோனா 58 ஆயிரம்

பாகிஸ்தானில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 573 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுக்குள் வைக்கவே பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாக்.கில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 573 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58278 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாகிஸ்தானில் இதுவரை 1202 பேர் பலியாகினர். நாட்டில் சிந்து மாகாணத்தில் அதிகமாக பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

ஆறுமுகன் தொண்டமான் !

Next Story

ஜார்ஜ் ப்ளாய்டின் கொலையும் டரம்ப் கொடூரமும்