அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நிரந்தர குடியிருப்பு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் தங்குவதற்கு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்க, பாக்., அரசு முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான பாக்., தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரி நேற்று கூறியதாவது. அதிக முதலீடுகளை வழங்கும் வெளிநாட்டு மக்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான அனுமதி வழங்கப்பட உள்ளது. இது, பாக்.,கில் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை.
ஆப்கானிஸ்தானை விட்டு வேறு நாடுகளுக்கு வெளியேறிய பணக்காரர்கள், பாக்.,கில் முதலீடு செய்து, இங்கு நிரந்தரமாக தங்கலாம். நம் அண்டை நாடான பாக்., தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரி நேற்று கூறியதாவது.
அதிக முதலீடுகளை வழங்கும் வெளிநாட்டு மக்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான அனுமதி வழங்கப்பட உள்ளது. இது, பாக்.,கில் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை. ஆப்கானிஸ்தானை விட்டு வேறு நாடுகளுக்கு வெளியேறிய பணக்காரர்கள், பாக்.,கில் முதலீடு செய்து, இங்கு நிரந்தரமாக தங்கலாம்.
கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் சீக்கியர்கள் பாக்.,கில் உள்ள மத வழிபாட்டு தளங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். பாக்.,கிற்கு குடிபெயர்ந்து, இங்கு தொழிற்சாலைகளை கட்டமைக்க விரும்பும் சீன நாட்டினர், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.