இலங்கையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.
வன்முறைக் குழுவின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், பொது மக்கள் அமைதியான முறையில் போராடுவதற்கு தடையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் குழு ஒரு வன்முறைக் கும்பல் என சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.