இலங்கைஅரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களில் வீடுகள், அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
கொழும்பு, மாத்தறை, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் மக்கள் தீப்பந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்த பதற்ற நிலையில் விசேட படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொமும்பு துறைமுகத்திற்கு மர்ம கொள்கலன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை முகநூலில் Thamotharam Pratheevan என்ற நபர் பதிவிட்டுள்ளார்.