வட அமெரிக்க நாடான பஹாமாஸில் வசிக்கும் புலம் பெயர்ந்தோர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சட்டவிரோதமாக குடியேறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன்படி பஹாமாஸின் பிமினி தீவில் இருந்து சமீபத்தில் 40 பேர் படகில் புளோரிடா புறப்பட்டனர்.மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்தால் வழியில் படகு கவிழ்ந்தது. தகவல் அறிந்த அமெரிக்க கடலோர காவல் படையினர் தேடுதல் பணிகளை துவங்கினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் புளோரிடாவின் போர்ட் பியர்ஸிலிருந்து 72 கி.மீ. தொலைவில் கடலில் மிதந்த படகையும் அதை பிடித்தபடி உயிருக்கு போராடிய ஒருவரையும் மீட்டனர்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாயமான 39 பேரை தேடும் பணி தொடர்கிறது.