புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கியதாக தற்காலிக அமைச்சரவையை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதற்மைய, புதிய அமைச்சரவையின் நிதியமைச்சராக அலி சப்ரி நேற்று (04) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அலிசப்ரி, நேற்று ஜனாதிபதி கோட்டாபயவினால் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் இன்று இராஜினாமா செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகின்ற எந்த செய்தியும் நம்பகத் தகுந்ததாக இல்லை. நாங்கள் யதார்த்தமானது என நம்புகின்ற தகவல்களை மட்டுமே பதிவிடுகின்றோம். இந்தச் செய்தி உண்மையானால் ஓகே. அல்லது அமைச்சர் அலி சப்ரி பதவியில் இருக்க விருமிபினால் மூக்குடைபட்டு அவமானப்பட்டுத்தான் வெளியேற வரும் என்று நாம் எதிர் பார்க்கின்றோம்.