நீருக்குள் நீண்ட பாலத்தை திறந்த சீனா!

நீருக்குள் செல்லும் வண்ணமயமான மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துவைத்துள்ளது. இந்தப் பாலம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் கட்டப்பட்டுள்ளது.

இச் சுரங்கப் பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின.

கிட்டத்தட்ட 11 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தைக் கட்டமைக்க 2 மில்லியன் கனமீட்டருக்கும் அதிகமான கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை இந்தப் பாலத்தினுள் 18 மீட்டர் அகலத்தில் 6 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஓட்டுநர்களின் சோர்வைப் போக்கும் வகையில் வண்ணமயமான எல்இடி விளக்குகளும் இப் பாலத்தினுள் பொருத்தப்பட்டுள்ளன

Previous Story

சீனா:சிலிண்டர் வெடித்து 18 பேர் பலி.

Next Story

தாஜ் மஹால்: 3 முறை அடக்கம் செய்யப்பட்ட மும்தாஜ்