நீதி நிதி மு.கா.!

 நஜீப்

உலகில் நீதியும், நிதியும் இல்லாத ஒரு நாடு இருக்கின்றது. அந்த நாடு இலங்கை. அந்தத் தேசத்தில் இல்லாத இரு துறைகளுக்கு ஒரு அமைச்சரும் இருக்கின்றார். அவர் அலி சப்ரி. இது ஒரு நொடி போலும்  தெரியலாம்.

இது இந்த நாட்டில் இருக்கின்ற ஒரு முஸ்லிம் அமைச்சர் பற்றிய முன்னாள் அதே துறைக்கு அமைச்சராக இருந்த ஹக்கீம், அலிசப்ரி பற்றி கடந்த வியாழன் நாடாளுமன்றத்தில் பேசும் போது நாட்டில் இல்லாத துறைகள் பற்றி சுட்டிக் காட்டிய தகவல்கள். இல்லாத துறைக்கு எதற்கு அமைச்சர் என்பது தலைவரின் கேள்வி, நியாயமானதுதான்.

அதே நேரம் கட்டுப்பாடு கொள்கை கோட்பாடு எதுவுமின்றி டீல் அரசியலை மட்டும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கென்றே ஒரு கட்சியும் நமது நாட்டில் இருக்கின்றது. அந்த அபூர்வக் கட்சி சார்பில் நாடளுமன்றத்தில் இருக்கும் ஒரே ஆளுக்கு கெபினட் அந்தஷ்த்து. அவர் தலைவரை மல்யுத்தத்துக்கு பல முறை அழைத்தாலும் தலைவரோ மௌன விரதம். அந்தக் கட்சி?

நன்றி: 08.05.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

மகிந்த விலகல்: பிரதமர் அலுவலக தகவல்

Next Story

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்