-நஜீப்-
தெற்காசிய நாடுகளின் அனேகமான அரசியல்வாதிகள் கணவனிடம் மனைவிக்கு பிள்ளைகளுக்கு என்று அரசியல் அதிகாரத்தை கைமாற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாமலும் தந்தை மஹிந்தாவை செல்வாக்கை பாவித்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிகளைச் செய்து வருது தெரிகின்றது. அதற்காக அவர் தற்போது ராஜகிரியாவில் ஒரு காரியலத்தையும் திறந்திருக்கின்றார்.
அவர் தற்போது ஒரு எதிர்க் கட்சித் தலைவர் போல அரசை விமர்சித்து சில இடங்களில் பேசி வருகின்றார். பசில் பிரதேச மட்டத்தில் மொட்டுக் கட்சியை மீளக் கட்டி எழுப்ப முனைகின்ற போது நாமல் தொழிற் சங்கத் தலைவர்கள் மற்றும் களைஞர்களை சந்தித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. நாமல் வருகின்ற தேர்தலில் எதிர்க் கட்சித் தலைமையைக் கைப்பறி 2030 அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவரது திட்டமாக இருக்கின்றது.
அதற்கு முன்னர் வரும் தேர்தலில் அவரைக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக காட்சிப்படுத்தவும் மொட்டுக் கட்சியில் ஒரு அணி தற்போது ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இதனால் மக்களிடத்தில் செல்வாக்கை பெற்றுக் கொள்வதற்காகத்தான் அவர் எதிர்க் கட்சித் தலைவர் போல் கதைக்கத் துவங்கி இருக்கின்றார். ஜனாதிபதி ரணிலை ஐரோப்பிய பயணத்துக்கு முன்னர் நாமல் இரகசியமாகவும் சந்தித்திருக்கின்றார்.!
நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்