நாமலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நாமல் ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டவிரோதமான முறையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்து கவர்ஸ் கார்ப்பரேஷனில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குற்றம் சாட்டப்பட்ட நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான கோரிக்கையை அன்றைய தினம் சமர்பிப்பார் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நீதிமன்றில் தெரிவித்தார்.

Previous Story

தப்பி ஓடி விட்டார் அவன்கார்ட் அதிபர்: விமான நிலைய சீ.சீ.ரி.வி இயங்கவில்லை!

Next Story

மரத்தால் விழுந்தவனை மாடு மிதிக்கிறது! கடனை தா சீனா!!