முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என தெரியவந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரிடம் பொலிஸ் விசாரணை நடத்துகின்றது.
இதன்படி திருடிச்சென்ற நாய்க்குட்டியை பிரதேச சபை உறுப்பினரின் மகள் பராமரித்து வருகின்றார் என தெரியவந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி உட்பட நாடு முழுவதும் நிலவிய அமைதியின்மைக்கு மத்தியில் ராஜபக்ஷவின் மெதமுலன வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அங்கிருந்த நாய்க்குட்டிகள் காணாமல் போயிருந்தன.
இதன்போது காணாமல் போன நாய்க்குட்டிகளில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரின் மகளுடன் இருந்த போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதேச சபை உறுப்பினரின் மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி இரவு போராட்டக்காரர்களால் வீடு தாக்கி சேதப்படுத்தப்பட்ட போது, வீட்டின் பின்பகுதியில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல நாய்க்குட்டிகள் காணாமல் போயிருந்தன.
அது குறித்து வீரகெட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.