-நஜீப்-
நமது கட்சி ஒரு கட்டத்தில் சீரோவாக இருந்து இன்று ஓரளவுக்கு மீண்டு வந்திருக்கின்றது. இப்போது முப்பது நாற்பது (30-40) இலட்சம் வரையிலான வாக்காளர் ஆதரவு எமக்கு இருக்கின்றது. நாம் மேலும் மீண்டு வருகின்றோம். இப்படிக் கூறுகின்றார் ஆளும் தரப்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்க.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எழுபது (70) இலட்சம் வரை வாக்குகள் மொட்டுக் கட்சிக்கு கிடைத்தது. அவர்களே கூறுகின்ற புள்ளி விபரங்களின் படி தமக்கு ஐம்பது (50) சதவீத வீழ்ச்சி என்பது உறுதியாகின்றது. ஆனால் அந்த வீழ்ச்சி விகிதம் மேலும் அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்பது யதார்த்தம்.
அத்துடன் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் பொதுத் தேர்தலாக இருந்தாலும் நமக்குப் பலமான போட்டி ஒன்று இருக்கின்றது என்பதனை எஸ்.பீ. பகிரங்கமாக ஒத்துக் கொள்கின்றார். அத்துடன் வருகின்ற தேர்தலில் வேண்டுமானால் இன்னும் இரண்டு ஆசனங்கள் மட்டுமே ஜேவிபிக்கு அதிகரிக்கும். இப்போது மூனாறாக இருக்கும் அவர்கள் ஆசனம் ஐந்தாக அதிகரிக்கும்.
இப்படிக் கூறும் எஸ்பி. வரும் தேர்தலில் கடும் போட்டி என்றும் சொல்கின்றார். இது என்ன கணக்கு என்று தெரியாது. அதே நேரம் நமக்கு எந்தப் போட்டியும் எந்தத் தேர்தல்களிலும் கிடையாது என்று கூறுகின்றார் மஹிந்த ராஜபக்ஸ.
நன்றி: 25.02.2024 ஞாயிறு தினக்குரல்