தேர்தல்-யாப்புக் கனவுகள்!

-நஜீப்-

நமது கூட்டணித் தலைவர்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீபாவளியில் தீர்வு என்று பல வருடங்களுக்கு முன்பு சொல்லி மூக்குடைபட்டிருந்தனர். எத்தனையோ தீபாவளிகள் வந்த போனாலும் பெரியவர் சம். சொன்ன எந்தத் தீர்வும் வரவில்லை.

அதற்குப் பின்னரும் மாகாணசபைத் தேர்தல், புதிய யாப்பு என்று ராஜாபக்கஸாக்களை நம்பி அல்லது அப்படி ஒன்றுமே நடக்காது என்று தெரிந்து கொண்டு தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விலலுக்கு நீர் இரைத்துக் கொண்டிருந்த போதெல்லாம் ஐயா பயிர் வளர வாய்ப்பு இல்லை அங்கே போய் என்தான் பண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள்?

ஏன் இன்னும் சமூக்த்தை ஏமாற்றி அரசியல் செய்கின்றீர்கள் என நாம் தொடர்ந்து மூத்தவர்களிடத்தில் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தோம். கடைசி நேரத்தில் கூட ராஜாக்களிடம் போய் தவம் இருந்த பார்த்தார்கள் இப்போது உங்களுக்கு சுகமா (செபத) என்றுதான் நாம் விரும்பியோ விரும்பமலோ கேட்க வேண்டி இருக்கின்றது.

நன்றி: 01.05.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஒரே நாடு ஒரே சட்டம்!

Next Story

மே  3 அபாய மணி! அநுரகுமார அதிரடி