நஜீப்
நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல்
நாம் இங்கு வெளியிடுகின்ற புள்ளிவிபரங்கள் சற்று அதிர்ச்சியானதாகவும் ஆச்சர்யமானதாகவும் இருக்கலாம். இந்த நாட்டில் இருக்கின்ற பௌத்த தேரர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய தகவல் யாருக்கும் தெரியாதாம்! பௌத்த அமைச்சில் கூட தகவல்கள் இல்லையாம்.
என்றாலும் ஒரு 35000 என்று சொல்லப்படுகின்றது. அதே நேரம் இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினர் 10 சதவீதமாக இருந்தாலும் அவர்களின் சமய குருமார்கள்-மௌவிகள் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட பௌத்த குருமாருக்கு சமன்.
இதில் ஒன்றும் ஆச்சர்யமும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தில் மௌலவிகளாக கற்று வெளியேறுபவர்கள் அனைவரும் பள்ளிகளில் பணிபுரிவது கிடையாது. வசதிபடைத்த பெற்றோர்களும் தமது குடும்பத்தில் ஒரு உலமா-மௌலவியை வைத்திருப்பது புனிதமான காரியம் என்று நம்புகின்றார்கள்.
இதனால்தான் இந்த எண்ணிக்கை. அப்படிக் கற்றவர்கள் என்ன தொழில் வேண்டுமானாலும் பண்ணலாம். அதே நேரம் பௌத்த தேரர்களுக்கு அந்த சுதந்திரம்?




