நஜீப்
நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல்
தேயிலைச் செடிக்கும் ஈரான் போருக்கும் என்ன உறவு.! நியாயமான கேள்விதான். அதற்கு நாம் ஜேவிபி. தலைவர் கதையில் இருந்து ஒரு பதிவைப் பார்ப்போம்.
நாம் கடந்த வாரம் சொன்னது போல போரில் கனதியான இழப்பு ஈரானுக்குத்தான் என்பது நமது வாதம்.
காரணம் இதுவரை டசன் கணக்கான மிக முக்கியமான தலைவர்களையும் (200) இருநூறு வரையிலான தளபதிகள் விஞ்ஞானிகள் என அது இழந்திருக்கின்றது.
துரத்தித் துரத்தி மொசட் ஈரான் மூளைசாலிகளை வேட்டையாடி வருகின்றது. அந்தவகையில் மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை இஸ்ரேல் ஈரானுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆனால் ஈரானும் தேசத்துக்காகவே நமது உயிர்கள் எனக் களத்தில் நிற்கின்றார்கள். போரை வெறித்தனமாக நகர்த்துகின்றார்கள்.
ஒரு முறை தம்மீது அரசின் அடக்குமுறைகள் பற்றி ரோஹன விஜேவீர பேசும் போது நமது இயக்கம் தேயிலை செடிபோன்றது.

அது வெட்ட வெட்டத்தான் செழிக்கும் என்றிருந்தார். லரிஜானியும் மரணங்கள் எங்களை சக்திப்படுத்தும் என்று சொல்லி இருந்தார்.!



