-நஜீப்-
அரசியல் ரீதியில் நாம் பல தவறுகள் விட்டதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்க்கின்றோம். எனவே எமது தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் மக்களுக்குப் பணியாற்ற எமக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்று சில தினங்களுக்கு முன்னர் மொட்டு கோட்பாதர் பசில் ராஜபக்ஸ பகிரங்கமாக மக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
ஓகே மன்னிக்கலாம் வாய்ப்பும் கொடுக்கலாம். அப்படியானால் அவர்கள் தாம் விட்ட தவறுகள் என்று எதனைச் சொல்ல வருகின்றார்கள் என்று கேட்கத் தோன்றுகின்றது. ராஜாக்கள் தாம் செய்த தவறுகள் என்ன என்பதையும் மக்களுக்கு பகிரங்கமாக ஒரு பட்டியல் போட்டுக் காட்ட வேண்டும்.
அப்போதுதான் சனங்கள் மன்னிப்பது பற்றி யோசிக்கும். அத்தோடு இதன் பின்னர் ராஜக்களும் அவர்கள் வாரிசுகளும் மக்களுக்கு என்ன நல்ல காரியங்கள் செய்யப் போகின்றது என்பதனை பகிரங்கப்படுத்தினால் மக்கள் மனம் உறுகி வாய்ப்புக் கொடுக்க அது உதவியாக இருக்கும்.! வெறுமனே தவறும் மன்னிப்பும் வாய்ப்பும் என்று கெஞ்சினால் எப்படி?
நன்றி: 21.05.2023 ஞாயிறு தினக்குரல்