தாகத்துக்கு கானல் நீர்!

-நஜீப்-

இனப் பிரச்சனைக்கு தீர்வு எனச் சொல்லி ஜனாதிபதி ரணில் தமிழ் தலைவர்களை கொழும்புக்கு அழைப்பதும், பெரியவர்கள் ரணில் தட்டில் வைத்துக் கொண்டிருக்கும் தீர்வை போய் பார்ப்பதும் அது பற்றி பேசுவதும், ரணில் பேச்சு வெங்காயம் என்பதும், நெடுநாள் கூத்துக்கள்.

நமது தலைவர்கள்  தீர்வை வென்றெடுப்பார்கள் என்று தமிழர்கள் எவராவது நம்புகின்றார்களா?  ஜனாதிபதி வழக்கம் போல இந்த முறையும் கதை விடுகின்றார் என்று தெரிந்தும் போதும் போதும்… முதலில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தி விட்டு தீர்வு பற்றி பேசும், என்று ரணில் முகத்தில் கூறியதாகச் செய்தி.

ஆனால் இவர்களது மாகாணசபைத் தேர்தல் கதைக்கு ஜனாதிபதி ரணில் ஒரு வார்த்தையேனும்  பேசவில்லையாம்! அப்போ பெரிசுகள்  வழக்கம் போல கொழும்பு பார்த்து வந்திருக்குதுகள். ஜூனில் மீண்டும் சந்திப்பும் பேச்சும் என்று ஏற்பாடாம்.

இப்படியே இந்தத் தலைமுறை தனது காலத்தை தீர்வுக் கதை சொல்லியே ஓட்டிவிடும்.  பெரிசுகள் அரசியல் இருப்புக்காகத்தான் தாகத்துக்குக் கானலை காட்டிப் பிழைக்குதுகள். இதனை குடிகள் புரியும் வரை அவர்கள் வியாபாரமும் தொடரும்.

நன்றி: 21.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாஸ்டர் ஜெரோம் பாலியில்!

Next Story

திருந்திட்டோம் நம்புங்கோ!