-நஜீப்-
ஆளும் ரணில்-ராஜபக்ஸாக்கள் செல்வாக்கு மக்கள் மத்தியில் கடும் வீழ்ச்சி கண்டு வரும் இந்த நாட்களில் வீறுகொண்டு எழுந்து நிற்க வேண்டிய பிரதான எதிரணியான சஜித் அணி இடையனை இழந்த மந்தைகள் போல் அங்கும் இங்கும் ஓடித்திரிகின்றன.
கடந்த வாரம் சிறுபான்மைத் தலைமைகள் மீண்டும் மதில் மேல் என்று சொல்லி இருந்தோம். இப்போது அவர்கள் மதிலில் இருந்து குதித்து ரணிலுடன் தேன் நிலவில் நிற்க்கின்றார்கள். இந்தக் கதையை அவர்களே கூறியும் வருகின்றார்கள்.
நானும் ஹக்கீமும் ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தோம.; அவர் ஒன்றிணைந்து பயணிக்க எங்களை அழைத்திருக்கின்றார். இந்த அழைப்பை நாம் சஜித்திடமும் முன்வைதிருக்கின்றோம் என்று ஊடகங்களிடம் பேசி இருந்தார் மனோ கணேசன்.
தரகர் வேலை பார்ப்போருக்கு ஜனாதிபதி ரணில் பதவிகள் வழங்குக்கின்ற போது அமைச்சுக்களை முன்கூட்டி ரிசேவ் பண்ணிக் கொள்ளும் முயற்சியாகத்தான் இது இருக்க வேண்டும். பீல்ட்; மார்ஷல், ராஜித, அர்ஷ, மயந்த, தலத்தா, போன்றவர்கள் இப்போது சஜித் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் பழைய கதை.