நஜிப்
நன்றி: 05.04.2026 ஞாயிறு தினக்குரல்
நமது வாசகர்களில் கணிசமான ஒரு தொகையினர் தமிழகத்தில் நடக்கின்ற தேர்தல் தொடர்பில் ஆர்வத்துடன் இருப்பது நமக்குப் புரிகின்றது. அவர்களையும் மனதில் வைத்துத்தான் இந்தக் குறிப்பு. நாளையுடன் வேட்புமனுவுக்கான இறுதி நாள்.
என்ன கருத்துக் கணிப்புக்கள் வந்தாலும் அங்கு முக்கோணப் போட்டிதான். ஸ்டாலின்-எடப்பாடி-விஜே. ஆனாலும் சிந்தனை ரீதியில் கருத்தியல் மாற்றத்துக்காக பேசிக் கொண்டிருப்பவர் சீமான்.
நமது ஜனாதிபதி அணுராவுக்கு வந்த அதிர்ஸ்டம் போல என்றாவது ஒருநாள் சீமானுக்கும் வாய்ப்பு வந்தாலும் வரக்கூடும்.
இந்தியாவில் தமிழகம் இப்போது ஒரு வளமான மாநிலமாக இருந்து வருகின்றது. விஜே வரவு எடப்பாடிக்கு மூன்றில் இரண்டு பாதிப்பையும் ஸ்டாலினுக்கு மூன்றில் ஒரு வீத பாதிப்புக்களையும் கொடுக்கக் கூடும்.
இந்தத் தேர்தல் தமிழக மக்களின் அரசியல் அறிவியல் தொடர்பான ஒரு பலப்பரீட்சையாக இருக்கும்.





