-நஜீப்-
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை முன்கூட்டித் தெரிந்து வைத்திருக்கும் ஊழல் பேர்வளிகள் தற்போது நாட்டில் இருந்து தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகத் தெரிகின்றது.
இப்படி 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கின்றார்கள். இந்தத் தகவல் ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தில் சொல்லப்பட்டது.
முன்கூட்டியே உதய கம்மன்பில நாட்டிலிருந்து ஸ்கெப்பாகி இருப்பது தெரிய வருகின்றது. அதே போன்று கடவுச் சீட்டு விவகாரத்தில் நடந்த மோசடிகள் பற்றி நீதி மன்றம் விசாரணைக்கு அதன் பணிப்பாளரை அழைத்த போது அவரும் நாட்டில் இருந்து சொல்லமல் கொள்ளாமல் தப்பியோடி இருப்பது அப்போதுதான் நீதி மன்றத்துக்குத் தெரிய வந்தது.
இன்னும் பலர் பாதுகாப்புக் கருதி முன்கூட்டி ஹோட்டல்களில் குடும்பம் சகிதம் தலைமறைவாக அரைகளை ஒதுக்கி வைதிருக்கின்றார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நன்றி: 22.09.2024 தினக்குரல் ஞாயிறு வாரஇதழ்