டொலர் விலை 200 ரூபா!

-நஜீப்-

இன்று நமது அரசியலில் ரணிலுக்கு மிக விசுவாசமான கருத்துக்களை முன்வைப்பதில் நம்பர் வன் ஆளாக இருப்பவர் ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன. தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியலை ரணில் இவருக்குக் கொடுத்து விட்டு ஜனாதிபதியானதால் அவர் ஜனாதிபதி ரணிலுக்கு விசுவாசமாக பேசுவது நடந்து கொள்வதும் நன்றிக் கடன் தொடர்பான செயல்பாடு என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

ஆனால் இவர் இன்று உலகத்தில் இருக்கின்ற மிகவும் சிறந்த தலைவர் ரணில் என்றும் ஒரு முறை கூறி இருந்தார். இன்னும் ஒரு இடத்தில் ரணில் இன்னும் பத்து வருடங்களுக்கு பதவியில் இருக்க வேண்டும் அப்போதுதான் இந்த நாடு செல்வம் கொளிக்கும் நாடாக மாறும் என்றும் அவர் கண்டு பிடித்திருக்கின்றார்.

இதற்கிடையில் அவர் இந்த வருடம் இறுதிக்குள் ரணில் டொலர் பெறுமதியை நமது ரூபா 200 ரூபாவுக்குள் கொண்டு வந்து விடுவார் என்றும் கூறி இருக்கின்றார். எனவே பொதுமக்கள் இவரது இந்தக் கதையை ஏதாவது ஒரு இடத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தன்னலத்துக்காக மனிதர்கள் எப்படி எல்லாம் வேசம் போட முடியும் என்பதற்கு இவை எல்லாம் நல்ல உதாரணங்கள்.

நன்றி: 19.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

முஸ்லிம் லீக் சம்மேளன ஏற்பாட்டில் தலைமைத்துவ செயலமர்வு

Next Story

வேரோடு களைதல் காலத்தின் தேவை!